விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு ஆன்லைன் டிக்கெட் பயன்பாடு..

கன்னியாகுமரி – சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்காமல் ஆன்லைன் டிக்கெட் அறிமுகம் செய்து செயல்படுத்திக் காட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் -க்கும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ_வ_வேலு -க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  என்_சுரேஷ்ராஜன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் சுற்றுலா பயணிகளிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இனிப்புகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூர் திமுக செயலாளர்  குமரி ஸ்டீபன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் . டாக்டர் ஜேஜேஆர் ஜெஸ்டின், மாவட்ட பிரதிநிதி . மெல்பின், பேரூர் பொருளாளர் . இன்பம், ஒன்றிய பிரதிநிதிகள் திரு நிஷார், ஆர் டி ராஜா, திரு செல்வராஜ், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் . பூவியூர்காமராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் . தமிழ்பாலன், ஹெய்சர்கான், திமுக நிர்வாகிகள் . பாபு,  ரூபின்,  அன்பழகன்,  வேலு, உட் பட திமுக நிர்வாகிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »