விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே கார் விபத்தில் போலீசார் இருவர் படுகாயம்

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகிய இருவர் படுகாயம்  அடைந்தனர் . போலீசார் விசாரணை .
சென்னை பேசின் பிரிட்ஜ் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் புருேஷாத்தமன், 37: இவர் தன்னுடன் பணிபுரியும் போலீஸ் ஏட்டு சதீஷ் குமார்,28: என்பவருடன் ,ஹூண்டாய் அசன்ட் காரில் (டி.என்.01.பிடி.7782)  தனது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். காரை ஏட்டு சதீஷ் குமார் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே கார் வரும் போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியது .


விபத்தில் காரில் பயணம் செய்த இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன், ஏட்டு சதீஷ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவசர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது பற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »