விக்கிரவாண்டியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டியில் கொரோனா நோய்  தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார் . சுகாதார ஆய்வாளர் பிரதிவிராஜ் வரவேற்றார் . செண்டியம்பாக்கம் தண்டபாணி கலைக்குழுவினரால் கொரோனா நோய் ஆபத்து குறித்தும் , தடுப்பூசி பாதுகாப்பு குறித்த  நாடக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஸ் நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.


  டாக்டர் கார்த்திகேயன் ,மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி,தனி தாசில்தார் கணேசன், பி.டி.ஓ., குலோத்துங்கன்  , செயல் அலுவலர் அண்ணாதுரை, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் ,வருவாய் ஆய்வாளர் சார்லின் மற்றும் வருவாய்துறை, சுகாதார துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி துறை அலுவலர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர் . விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமையில் தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. அருகில் தாசில்தார்  தமிழ்செல்வி . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »