வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இத்திருவிழாவில் வருசநாடு  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு லட்சுமி நாராயணப் பெருமாளை வழிபட்டனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை வருசநாடு பெருமாள் கோவில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர். அர்ச்சகர் வேல்முருகன் அர்ச்சனை பணியில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »