வருஷநாட்டில் கஞ்சா விற்ற ஒருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிர் தெருவில் குடியிருக்கும் பெருமாள் மகன் தென்னரசு வயது 45 என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பதாக வருஷநாடு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி மற்றும் காவலர்கள் அசோக்குமார் சக்கன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின்போது மேற்படி நபரை சோதனை செய்தபோது அவரிடம் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வருஷநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உடன் தனிப்பிரிவு காவலர் ரஞ்சித் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் கருப்பையா உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »