வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் ‘தலைவர் புரட்சி திலகம்’ உத்தரவின்படி மாநில துணை பொது செயலாளர் G. ஈஸ்வரன் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் V. P. சந்திரன் தலைமையில் ‘மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சியும்’ புதிய கொடி கம்பத்தில் *கொடி ஏற்றும் விழா* நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் Dr.R.காமராஜ் கொடி ஏற்றினார். நிகழ்ச்சிக்கு G.கல்லுப்பட்டி கிளை செயலாளர் V. சுப்புராஜ் வரவேற்புரை வழங்கினார். பெரியகுளம் ஒன்றிய பொருளாளர் S. ஜெயராம், பெரியகுளம் ஒன்றிய மாணவரணி செயலாளர் C.தினேஷ்  ஆகியோர் முன்னிலையில் காலை 9.00 மணிக்கு G. கல்லுப்பட்டியில் வைத்து இரு பெரும் தலைவர்களுக்கு பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கியும், நினைவுநாளுக்கு மலரஞ்சலி செலுத்தி இயக்கத்தின் புதிய கொடி ஏற்றப்பட்டது மேற்படி தேனி வடக்கு மாவட்ட தலைவர் S.K. ஜெய்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் S. அரசு பாண்டி , ஒன்றிய செயலாளர்கள் R.C. முருகேசன் , அல்லிபாலா , மாவட்ட மகளிரணி செயலாளர் S. ஈஸ்வரி, மாவட்ட  மகளிரணி துணை S. விஜயா, மாவட்ட துணை வர்த்தகணி செயலாளர் C. முருகன் ஆகியோர் கலந்து விழாவை சிறப்பித்தனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »