வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 8 கிலோ கஞ்சா, 1 இரு சக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

வண்ணாரப்பேட்டை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW/Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம்,வண்ணாரப்பேட்டை, மூல கொத்தலம் C.B சாலை சந்திப்பில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த மூர்த்தி, வ/43, த/பெ. ஆறுமுகம், எம்.ஜி.ஆர்நகர், வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செ ய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது ஏற்கனவே, G-2 பெரிய மேடு காவல் நிலையத்தில் 1 கஞ்சா வழக்கு உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட மூர்த்தி விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »