வடபழனி பகுதியில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய நபர் கைது.

சென்னை, கோடம்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெரு, எண்.22 என்ற முகவரியில் வசித்து வரும் ஜெகநாதன், வ/45, த/பெ.பாலநந்தம் என்பவர் காலை 9.30 மணியளவில் கோடம்பாக்கம், பவர் ஹவுஸ் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மதுபாட்டில் கேட்ட போது, அங்கிருந்த பார் ஊழியருடன் தகராறு ஏற்பட்டு இருவருக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பார் ஊழியர் பீர்பாட்டிலை எடுத்து மேற்படி ஜெகநாதனை தாக்கியுள்ளார். தாக்குதலில் இரத்த காயமடைந்த ஜெகநாதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து R-8 வடபழனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

 R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பார் ஊழியர் லூயிஸ் அலெக்ஸாண்டர், வ/35, த/பெ.சேசுராஜ், வெட்டிவயல் கிராமம், தேவகோட்டை தாலுகா, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட லூயிஸ் பாஸ்டர் மீது மது விற்பனை செய்த குற்றத்திற்காக  3 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட லூயிஸ் அலெக்ஸாண்டர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »