ராமாபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. 1 இருசக்கரவாகனம்பறிமுதல்.

சென்னை, ராமாபுரம், நாயுடு தெருவில் வசித்து வரும் சுரேஷ்குமார், வ/30, த/பெ. கலைவாணன் என்பவர் இரவு தனது யமஹா இரு சக்கர வாகனத்தை மேற்படி வீட்டிற்கு முன்பு நிறுத்தி விட்டு, காலை பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சுரேஷ்குமார், R-11 ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-11 ராமாபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி இரு சக்கர வாகனத்தை திருடிய சந்தானகுமார், வ/33, த/பெ.புண்ணியமூர்த்தி, பஜனை கோயில் தெரு, ராமாபுரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் யமஹா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி சந்தான குமார் விசாரணைக்குப் பின்னர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »