மூலக்கடை ஊராட்சியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு

வருஷநாடு – மூலக்கடை ஊராட்சியில் காளியம்மன் கோவில் முன்பு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தார் சாலை மற்றும் வடிகால் சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் நீர் மற்றும் கழிவுநீர் நடைபாதையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுளிக்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருத்தில் கொண்டு அதில் பாதியில் நிறுத்தப்பட்ட சிமெண்ட் சாலையை இணைத்து வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »