மீனம்பாக்கம் பகுதியில் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, மீனம்பாக்கம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஜெயசந்திரன், வ/35, த/பெ. தண்டபாணி என்பவர் மீனம்பாக்கம், அம்பேத்கர் தெருவில் வாடகைக்கு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே கொடிதுரை என்பவர் வாடகைக்கு மளிகைகடை நடத்தி வருகிறார். மேற்படி மளிகை கடைக்கும், ஜெராக்ஸ் கடைக்கும் ஒரே மின்மீட்டர் பெட்டி உள்ளதால், மேற்படி இருவருக்கும் மின்கட்டணம் செலுத்துவதில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மாலை ஜெயசந்திரன், மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக மளிகை கடையில் இருந்த கொடிராஜை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, வாய்தகராறு ஏற்பட்டு, வாய்தகராறு முற்றிய நிலையில் கொடிதுரை கத்தியால் ஜெயசந்திரனை தாக்கியதில் ஜெயசந்திரனின் இடது தோள்பட்டையில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டது. உடனே, ஜெயசந்திரனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து S-3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொடிதுரை, வ/40, த/பெ. தங்கபாண்டி, சாமிநகர் 1வது தெரு, திரிசூலம், சென்னை என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கொடி துரை விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »