மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபர் கைது. 1.1 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

மாதவரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW/ Madhavaram) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம், மாதவரம் சின்ன ரவுண்டனா அருகில் வாகன தணிக்கை பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்த போது, இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் மேற்படி இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த சதிஷ்குமார், வ/30, த/பெ. முனியாண்டி, சின்னகண்ணு தெரு, சின்ன சேக்காடு, மணலி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரி சதிஷ்குமார் மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 குற்றவழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »