மாணவர்களின் கால்களை பதம் பார்க்கும் தார்ச்சாலை

வருஷநாடு – வருசநாடு ஊராட்சியில் உள்ள தரும ராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் தேவாலயம்,  கால்நடை மருத்துவமனை செல்லும் மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வருஷநாடு மெயின் ரோட்டில் இருந்து பிரியும் ரேஷன் கடையில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை ஆகும் இச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது மாணவர்கள் பெரும்பாலும் மிதிவண்டியில் வருவதால் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் எதிர்வரும் நிதியில் சாலையை அமைத்துக் கொடுக்க கேட்டுக் கொள்கின்றனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Scroll to Top