மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி மையங்களை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு..

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் *இல்லம் தேடிக் கல்வி* மையங்களை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத். ஆகியோர் ஆய்வு செய்தனர். சிறப்பாக பதில்கூறிய மாணவர்களுக்கு நூல்கள் வழங்கி பாராட்டினர்.  தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பூங்கொத்து வழங்கினர்..


மாணவர்கள் குழுவாக பாடல்கள் பாடிக்காட்டினர். கதைகள் மற்றும் செயல்பாடுகளை செய்து காட்டி பாராட்டுகளைப் பெற்றனர். கொட்டாம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் அழகுமீனா, முத்துக்குமரன் மேலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »