மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி காய்கறி சந்தையை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை துவக்கம்..

மதுரை – மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி மாநில நிதி ஆணைய மூலதன மானியம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட காய்கறி சந்தையை மதுரை மாவட்ட ஆட்சியாளர் அணீஸ் சேகர் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து சோழவந்தான் புதிய பாலத்தின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் உதவி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »