மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்..

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பொது மக்களிடம் குறை தீர்க்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இம்முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலாநிதி, செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »