மண்டபம் அருகே படகில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு

ராமேசுவரம் –

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள தர்ஹாவலசை கிராமத்தை சேர்ந்த மீனவர் முனீஸ்வரன் சனிக்கிழமை மாலை தனது நண்பர்கள் திருக்குமார், ராதாகிருஷ்ணன், கண்ணன், லிங்கத்துரை, தயாநிதி ஆகிய 6 பேரும் படகில் கடலுக்குள் சென்றுள்ளனர். சிறிதுதூரம் சென்றவுடன் படகில் இருந்த தயாநிதியை கானவில்லை. இதனால்; அதிர்ச்சியடைந்த சகநண்பர்கள் கடலில் குதித்து பார்த்த போது மயங்கிய நிலையில் தயாநிதியை மீட்டு உச்சிப்பளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்குவந்த சார் ஆய்வாளர் கணேசமூர்த்தி விசாரணை மேற்கொண்டு உடல்கூறு செய்ய ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்துகடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஞாயிற்றுகிழமை வழக்குபதிவு செய்து உடன் சென்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »