பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுக்க திருவோடு ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

கோவை  பல்வேறு பொதுத்துறை  நிருவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கபடுவதை தடுக்க வலியுறுத்தி திராவிடத்தமிழர் கட்சியினர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.அதன் நகலை கோவை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்க வந்த அவர்கள் கையில் திருவோடு ஏந்திய வாறு  கோசமிட்டு வந்தனர். அவர்கள் கூறும்போது
அரசுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் அனைவரும் திருவோடுதான் ஏந்த வேண்டும் என்பதை வலியுறுத்த இவ்வாறு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »