பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர்..

மதுரை – மறைந்த முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமாகிய அனைத்து கழக முன்னோடிகளுக்கு அண்ணனாக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக  செயலாளர் மு மணிமாறன் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் திருமங்கலம் நகர திமுக தலைவர்மு.சி. சோ.முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம்,உசிலை சிவா, ஏர்போர்ட் பாண்டி,  மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய குழு தலைவர் வேட்டையன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா், தனபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியராஜன் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் அனைத்து ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »