பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி…

வேலூர் – பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்ன தாமல் செருவு   ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜே. ராஜமாணிக்கம்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். லட்சுமி ரவி .கணேசன். சாந்தி ஜீவா. ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவுகிறது  இதில் ராஜமாணிக்கம் பத்து வருடங்கள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார். அத்துடன் மற்றொரு பகுதியில்  நாட்டாமை தாரறாகவும் இருந்துள்ளார். ராஜமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோதும் சரி பதவியில் இல்லாத போதும் சரி தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எந்த விளம்பரமும் இல்லாமல் செய்வார் குறிப்பாக எத்தனையோ ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். அது போல் ஆர். லட்சுமி ரவியும் பத்து வருடங்கள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »