பெண்ணின்ஆபாச புகைப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி மிரட்டிய நபர் கைது…

சென்னை, கொளத்தூர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்மணி மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு போன் மூலம் அறிமுகமான Event Manager ரஞ்சித் என்பவர் மேற்படி பெண்மணியிடம், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சினிமாகதை கூறி நட்பு ஏற்படுத்தியுள்ளார். ரஞ்சித் அடிக்கடி மேற்படி பெண்ணை தொடர்பு கொண்டு சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மேற்படி பெண் அவரின் தொடர்பை துண்டித்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் தனது பெயரை தீக்‌ஷ்குப்தா என பெண் பெயரில் மாற்றி வேறொரு செல்போன் எண் மூலம் மேற்படி பெண்ணிடம் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டு, தானும் மாடலிங் துறையில் இருப்பதாகவும், மாடலிங் புகைப்படத்தை அனுப்பும்படி மேற்படி பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண் தனது மாடலிங் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். ரஞ்சித் அந்தப் பெண்ணின் மாடலிங் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியுள்ளார். மேலும் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனகூறி மிரட்டி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையிடம் இதுகுறித்து குறியுள்ளார். உடனே பெண்ணின் தந்தை இதுகுறித்து V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

 V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர்கிரைம் காவல்குழுவினரின் உதவியுடன் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ரஞ்சித், வ/26, த/பெ.எழில்அரசன், எண்.12, கிருஷ்ணாபுரம் அஞ்சல், மடத்துக்குளம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம் என்பவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி ரஞ்சித் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் தங்கி Event Manager தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »