புளியந்தோப்பு பகுதியில் நடந்த கொலை வழக்கில் உறவினர் கைது….

சென்னை, புளியந்தோப்பு, அம்பேத்கர்நகர், 2வது குறுக்குதெரு, எண்.363 என்ற முகவரியில் கொத்தனார் வேலை செய்யும் ராஜேந்திரபாபு, வ/40, த/பெ. நரசய்யா என்பவர் வசித்து வந்தார். ராஜேந்திரபாபு கடந்த 07.02.2022 அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் தனது மனைவி மெர்சி என்பவரின் அண்ணன் மகள் நலங்கு வைக்கும் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என கூறி, மனைவி மெர்சியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கவனித்த மெர்சியின் அக்கா மகளின் கணவர் சதீஷ் என்பவர், மாமா ராஜேந்திரபாபுவிடம் ரோட்டில் வைத்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டபோது, ஏற்பட்ட தகராறு முற்றி ராஜேந்திரபாபு கல்லால் சதீஷை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த சதீஷ் சிறிய கத்தியை எடுத்து ராஜேந்திரபாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். இரத்த காயமடைந்த ராஜேந்திரபாபுவை உறவினர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேந்திரபாபு ஏற்கனேவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து கொலையுண்ட ராஜேந்திரபாபுவின் தம்பி ஜனார்த்தனன், வி/30, த/பெ. நரசய்யா என்பவர் P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷ், வ/28, த/பெ.அப்பர், எண்.11/5, திரு.வி.கநகர், 8வது தெரு, புளியந்தோப்பு, சென்னை என்பவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »