புனிததோமையர் மலை காவல் மாவட்டத்தில் 2வது மனைவியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது.

சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டத்தில் 30 வயது பெண்மணி, அவரது கணவரை 6 வருடங்களுக்கு முன் பிரிந்து, கண்ணன் என்பவருடன் சேர்ந்து மேற்படி முகவரியில் கணவன், மனைவியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்படி வீட்டில் வசித்து வரும் கண்ணன், அந்த பெண்மணியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, அந்த பெண்மணி W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கண்ணன், மேற்படி பெண்ணுடன் சுமார் 6 வருடங்களாக கணவன், மனைவியாக வசித்து வந்ததும், அந்த பெண்ணின் 12 வயது மகளிடம் பலமுறை பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதன் பேரில், W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து எதிரி கண்ணன், வ/38, த/பெ.ஜெயச்சந்திரன், ஐயப்பன்தாங்கல், சென்னை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி கண்ணன் நேற்று (03.03.2022) விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »