பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலையில் ஒரு வாரமாக சாக்கடை நிரம்பி சாலையில் ஓடும் கழிவுநீர் – நோய் பரவும் அபாயத்தில் பகுதி மக்கள்..

மதுரை – மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலை எப்போதும் பரபரப்போடு வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். இச்சாலையில் இரு இடங்களில் பாதாளச் சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது.  இதேபோல் காமராஜபுரம் காய்கறி மார்க்கெட் அருகேயும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.


பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் கழிவு நீர் நிரம்பி ஆறுபோல் ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில்கழிவு நீர் தேங்காமல் நோய் பரவாமல் இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதாரமாக வைத்து இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »