பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

பழனி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மலர்தூவி வீரவணக்கம் செய்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி.செந்தில்குமார் கலந்து கொண்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்வின் தலைமையாக தொகுதி செயலாளர் துரை.முத்தரசு முன்னிலையாக  மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொன்னிவளவன் மாவட்ட பொருளாளர் திருமாறன் வழக்கறிஞர் குமாரசாமி வரவேற்புரையாக நகர செயலாளர் மணவாளன், மற்றும் இந்நிகழ்வில் கோதைமங்கலம் முத்துக்குமார் நகர துணைச் செயலாளர் தமிழண்ணன், அன்பழகன்,வள்ளிதயாளன், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் வாஞ்சிநாதன், முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர் செல்லத்துரை, ஆயக்குடி பேரும் செயலாளர் பிரபு, பாராளுமன்ற பொறுப்பாளர் இனியன், காளிமுத்து, மணிகண்டன்,வளவன் வாய்க்கால், மணிமுத்து , ஆதிவளவன், பிரபு, மில்லர் மண்டேலா, கார்த்திக்,முருகேசன், மாயவன்,கார்த்திக் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »