பழனி அடிவாரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா…

பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவர் – 114வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர மற்றும் ஒன்றிம் சார்பாக அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் பெரியராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் ராஜா மாநில தலைமை கழக பேச்சாளர் குமணன்பழனி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமரன், பழனிநகர  மகளிர் அணிச் செயலாளர் அ.கலையமுத்தூர் சுப்பிரமணி, RMTC சுப்பிரமணி,கஜேந்திரன் ஜெகதீஷ் குமார் சிங்காரவேலன்மற்றும் ஊராட்சி கழக நகர கழக நிர்வாகிகள் பலரும் கலந்து  கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெய்வ பக்தியும் தேச பக்தியும் பற்றி அனைவரும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியின் போது காவல்துறையினர் சிறந்த பாதுகாப்பை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »