பழனியில் பள்ளி மாணவிகளுக்கு மகளிர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு..

பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழனி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் பள்ளி மாணவிகளுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .  
    இந்நிகழ்வில் பெண்கள் செல்போன்களில் பேஸ்புக், வாட்ஸ் அப், போன்ற தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட கூடாது, நேரடியாக எந்த ஒரு ஆண்களிடமும் லைவ் என்று சொல்லக்கூடிய தளங்களில் பேசக்கூடாது, தங்களது பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்களை முன்பின் தெரியாத ஆண்கள் இடம் தரக் கூடாது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை கருத்துக்களை விழிப்புணர்வாக எடுத்துக் கூறினர் .

இந்நிகழ்வில் மகளிர் காவல் நிலைய காவலர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் ஆசிரியைகளும் மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »