பரோலில் வெளிவந்து சுமார் 14 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த ஆயுள் தண்டனை குற்றவாளி கைது.

சென்னை, சாலிகிராமம், தசரதபுரம் மெயின் ரோடு, எண்.13/5 என்ற முகவரியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சசி (எ) சசிகுமார், வ/49, த/பெ.ராஜாபாதர் என்பவர் கடந்த 1994ம் ஆண்டு R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, 1996ம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஆவார். இவர் கடந்த 10.11.2009-ம் ஆண்டு சிறையிலிருந்து 3 நாட்கள் பரோலில் வெளி வந்தவர் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிறைத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-5 விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி ஆயுள் தண்டனை குற்றவாளி சசி (எ) சசிகுமார் என்பவரை சென்னை, கோயம்பேட்டில் வைத்து கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட எதிரி சசி (எ) சசிகுமார் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

பரோலில் வெளி வந்து சுமார் 14 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை குற்றவாளியை கைது செய்த, R-5 விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »