பரவளூர் கிராமத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மனநிலை பாதித்த மகன் – விருத்தாசலம் போலீசார் விசாரணை…

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவளூர் கிராமம்,  மூலக்காடு ராமதாஸ் நகரை சேர்ந்தவர்  மகாலிங்கம் வயது 63, கூலி தொழிலாளியான  இவரது மகன் அறிவுச்சுடர் வயது 35 ஆகும் , அறிவுசுடருக்கு   மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர். பெருமபாலும்  இரவு நேரத்தில் மகன் சுற்றி திரிவதை தடுக்க இரவில் மட்டும்  சங்கிலியால் கட்டி வைக்கபடுவதாக  அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
 இந்நிலையில் செப்டம்பர் 15 ந் தேதி  நேற்று இரவு கவன குறைவு காரணமாக அவரை சங்கிலியால் கட்டி வைக்க  மறந்துவிட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அவரது தந்தை மகாலிங்கம்  தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது மகன்  அறிவுச்சுடர்  மரக்கட்டையால் அப்பா மகாலிங்கத்தை கடுமையாக தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் .
இதுபற்றி தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் போலீசார், மகாலிங்கம் உடலை  கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 அதனை தொடர்ந்து  அறிவுச்சுடரை கைது செய்து மனநிலை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.  மனநிலை  பாதித்த மகன் தந்தையை  தாக்கி கொலை செய்ததால்  பரவளூர்  பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »