நேபாளத்தில் நடக்கும் சர்வதேச கபாடி போட்டியில் விளையாட இருக்கும் மாணவிக்கு மாநிலத் தலைவர் டாக்டர் C.ராஜா விக்ரமசிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கன்னியாகுமரி – ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளாநல்லி அருகே உள்ள காரணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி..இவர் தனியார் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..அடுத்த மாதம் நேபாளத்தில் நடைபெறும் இண்டோ நேபால் சர்வதேச சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. மேலும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த நாலாவது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அளவில் 19 வயதுக்கு மேற்பட்ட  பெண்களுக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.,மேலும் மாநில அளவில் பெருந்துறையில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.. தங்கப்பதக்கம் வென்றுள்ள மாணவிக்கு அனைத்து இந்து சமய திருக்கோவில் நலச் சபை மாநில தலைவர் டாக்டர் C.ராஜா விக்ரமசிங்கம்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »