நூலகத்தில் சாதனையாளர் விருது வழங்கும் விழா..

தேனி – தேனிமாவட்டம் தென்கரை பெரியகுளம் கிளை நூலகத்தில் தந்தைப பெரியார் 143 – வது, அறிஞர் அண்ணா -113, வ.உ.சிதம்பரனார் 150- வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற  த.வெங்கடேஷ்குமார், ரெ.தமிழ்ச்செல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கியும் , பாராட்டு பெற்ற தன்னார்வளர்களுக்கும், சிலப்பாட்டத்தில் கலைவளர்மணி விருது பெற்றவர்களுக்கும், சிறந்த பேச்சாளர்களுக்கும் , சமுக நலம் சார்ந்த பாராட்டு பெற்ற நண்பர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அய்யாசாமி பிறந்தநாள் விழா கேக் வெட்டி அனைவரின் உள்ளத்தில் பகிர்ந்து கொண்டார் .இச்சிறப்பு அவரது வயதிற்கு அல்ல.. இந்நூலகத்தின் சிறப்பாகும் . மாநில நல்லாசியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு மழலைச்செல்வன் கெளதம், மஹபுப் பீவி ஆசிரியர், பேராசிரியர் பத்மினிபாலா, நல்லாசிரியர் ராஜ்குமார் கவிதை பாடியும், வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், இந்நிகழ்வின் தலைமை வழக்கறிஞர் மணிகார்த்திக், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வரவேற்பு நல்லாசிரியர் கவிஞர் AC.சிவபாலு அரைஸ் தொண்டு நிறுவனம் மூலம் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »