*நில அளவை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை*

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலகம் ஒன்றியத்தின்  மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள்மாநில தலைவர் காயாம்பூ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் சிவகுமார் மாவட்ட தலைவர் முத்து முனியாண்டி மாவட்டச்செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் மாவட்ட இணை செயலாளர் கவிதா மாவட்ட பொருளாளர் ரகுபதி உட்பட மதுரை விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்  நில அளவை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,பட்டா மாறுதல் சம்பந்தப்பட்ட வேலைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »