நாகர்கோவில் கணபதி புறத்தில் புதிய சுகாதார நிலையம் அமைத்து தர அமைச்சரிடம் வலியுறுத்தல்..

கன்னியாகுமரி –

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து 50  ஆண்டுகள் பழமையான கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு புதிய கட்டிடங்கள் கட்டி தரவும், X-ray ,Scan போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவங்கவும் கேட்டு மனு அளித்துள்ளார். மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி-யிடம் உறுதி அளித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »