நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரத்தில் இருந்து அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி…

கன்னியாகுமரி – பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு தமிழக அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான என்_சுரேஷ்ராஜன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றியக் கழகச் செயலாளருமான என்_தாமரைபாரதி அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் . மதியழகன், பேரூர் செயலாளர்  மாடசாமி. உட் பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் புகழ்பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசாமி கோவில் திருத்தேர் அமைந்துள்ள இடத்தில் சீரமைக்க இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்_சுரேஷ்ராஜன் தலைமையில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »