நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாள் கொண்டாட்டம்..

வேப்பூர்  – நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் திராவிடத்தின் தந்தை பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் கொண்டாடபட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தந்தை பெரியாரின்  பிறந்த நாளை செப்டம்பர் 17 ந் தேதியை சமூகநீதி நாளாக  கொண்டாடபடும் என அறிவித்துள்ளார்.


அதனை தொடர்ந்து,  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆலோசனையின் படி,  கடலூர் மேற்கு மாவட்டம்,  நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்,  வேப்பூர் அருகிலுள்ள  கீழக்குறிச்சி ஊராட்சியில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு, கடலூர் மேற்கு  மாவட்ட பொருளாளரும், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான. பாவாடை கோவிந்தசாமி    மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்  மாரிமுத்தாள் குணசேகரன் , ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தனசேகரன், நகர் பாபு, கீழக்குறிச்சி கிளை செயலாளர் முருகேசன்.  வெங்கடேசன் . சிறுநெசலூர் ரஜினிகாந்த் கீழக்குறிச்சி திமுக நிர்வாகிகள் முத்துசாமி, குமார் ,சுப்பராயலு, ராமமூர்த்தி, ரமேஷ், மாயவன் ,சேகர் ,கொளஞ்சி ,முனுசாமி, பூமாலை ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »