தொண்டாமுத்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்ற பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திபாளையம பகுதியில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையில் காட்டு வேலைக்கு சென்று வந்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜயா (55) பள்ளத்தை கடக்க முயன்ற பொழுது காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் வந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அவரது உடலை தேடும் பணியில் பேரூர் வட்டார அலுவலர்கள் தீயணைப்புத்துறையினர்  ஈடுபட்டனர்.‌ தொடரந்து இரண்டு நாட்கள் தேடுதல் நடத்தியும் உடல் கிடைக்க வில்லை. மூன்றாவது நாளாக பொக்கலைன் முலம் தேடுதல் நடத்தினர்‌ அப்பொழுது சென்னனூர் குட்டையில் சேற்றில் பெண்ணின் உடல் சிக்கி இருந்ததைக் தீயணைப்பு துறையினர் கண்டு பிடித்து உடலை மீட்டு பேரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்று நாட்களுக்கு பிறகு உடல் கிடைத்ததை அங்கு கூடி இருந்த ஊர் மக்கள்  பார்த்து கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »