தேனி மாவட்டம் கண்டனூர் அருகே பட்டப்பகலில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது…

தேனி – தேனி மாவட்டம் கண்டனூர் அருகே எட்டப்பராஜபுரத்தைச்  சேர்ந்தவர் சரவணன் (36). இவர், இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு பைக்கில் சென்றவர், மீண்டும் சுமார் 9 மணியளவில் வீடு திரும்பினார். பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றவர், வெளியில் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யாரோ , இரண்டு வாலிபர்கள் பைக்கை திருடி, தள்ளிக் கொண்டு சென்றதாக தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்களின் உதவி உடன் அவர்களையும்  பைக்கையும் பிடித்து கண்டமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் பைக்கை திருடியவர்கள், கண்டமனூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் அஜித்குமார் (23), சுப்புராஜ் மகன் தனபாண்டியன் (25) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பைக் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »