துாங்கிய பெண்ணிடம் திருட முயற்சி… தடுத்ததால் கத்திக்குத்து .

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த  கயத்துார் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி சரோஜா, (50) தனிமையில் வசித்து வந்த இவர் , நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரே பெஞ்சில்  படுத்து துாங்கியுள்ளனர். நள்ளிரவில் சுமார் 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த ஜெயினை அறுத்த முயற்சித்துள்ளார் . உடனே பதறி எழுந்த சரோஜா சத்தம் போட்டபடி அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்து  திருட்டை தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமி கையில் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார் .இதில் சரோஜா கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ள்ளார்.
       இது பற்றி தகவலறிந்தவிக்கிரவாண்டி போலீசார் திருட்டு முயற்சி குறித்து சரோஜா விடம் விசாரணை செய்து வருகின்றனர் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »