துரைப்பாக்கம் பகுதியில் தகராறு செய்து தாக்கிக் கொண்ட இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டு இருவரும் கைது.

சென்னை, துரைப்பாக்கம், சுப்புராயன் நகரில் வசித்து வரும் பிரவீன், வ/29, த/பெ. ராஜா என்பவர் குட்டியானை சரக்கு வாகனத்தில் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வருகிறார். பிரவீன் கடந்த 06.06.2022 அன்று இரவு சுமார் 08,30மணியளவில், துரைப்பாக்கம், சர்வீஸ் சாலை, அருணா ஸ்டோர்ஸ் என்ற கடைக்கு கேன் தண்ணீர் விநியோகம் செய்வதற்காக, குட்டியானை சரக்கு வாகனத்தில் தண்ணீர் கேன்கனை ஏற்றிக் கொண்டு வந்த போது, அங்கிருந்த ஒருநபர் பிரவீனிடம் வீண்தகராறு செய்து, கத்தியைக் காட்டி மிரட்டி வாகனத்தை திரும்ப எடுத்து செல்லுமாறு மிரட்டினார். உடனே, பிரவீனுக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து J-9 துரைப்பாக்கம் காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். 

விசாரணையில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் அபி (எ) அபினேஷ், வ/23 என்பதும், இவர்J-9 துரைப்பபாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பிரவீன் சரக்கு வாகனத்தில் தண்ணீர்கேன் எடுத்து வந்த போது கத்தியைக் காட்டி மிரட்டி தகராறு செய்த போது, இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் இருவருக்கும்காயம்ஏற்பட்டதும்தெரியவந்தது.

இது குறித்து அபினேஷ் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து எதிரி பிரவீன், வ/29, த/பெ.ராஜா, சுப்புராயன் நகர், துரைப்பாக்கம் என்பவரை கைது செய்தனர். இதே போல, பிரவீன் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து, எதிரிஅபி (எ) அபினேஷ், வ/23, த/பெ. மதன், கங்கயைம்மன் கோயில் தெரு, துரைப்பாக்கம் , சென்னை என்பவரை கைது செய்தனர். அபினேஷிடமிருந்து1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.   கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில்அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »