திருவேற்காடு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது. 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

         

சென்னை, திருவேற்காடு, செல்லியம்மன் நகர், பிள்ளையார் கோயில் தெருவில் முத்துவேல், வ/59, த/பெ.ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் தேவி, வ/28 என்பவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்குடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தேவி தனது கணவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மேற்படி தனது தந்தை முத்துவேல் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார்.

இரவு சுமார் 08.25 மணியளவில் கார்த்திகேயன் தனது மாமனார் முத்துவேல் வீட்டிற்கு வந்து அங்கு தங்கியிருந்த தனது மனைவி தேவியுடன் மது போதையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்து கையால் தாக்கியுள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கார்த்திகேயன், கத்தியால் தேவியை குத்த முயன்றுள்ளார். உடனே முத்துவேல் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், T-5 திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி சம்பவயிடம் சென்று விசாரணை செய்து கொண்டிருந்த போது, கார்த்திகேயன் போலீசாரை ஆபாசமான வார்த்தைகள் பேசி பணிசெய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »