திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியை ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் ராபின் (எ) ஜான்மோசஸ் என்பவர் காதலித்து வந்துள்ளார். கடந்த 24.12.2021 அன்று ராபின் (எ) ஜான்மோசஸ் மேற்படி 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டுள்ளார். சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் நேற்று (28.02.2022) W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்ட ராபின் (எ) ஜான்மோசஸ், வ/25, த/பெ.பாபு, எண்.7, சுதந்திராநகர், ஆயிரம் விளக்கு, சென்னை என்பவரை நேற்று (28.02.2022) கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராபின் (எ) ஜான்மோசஸ் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ராபின் (எ) ஜான்மோசஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »