திருவல்லிகேணி பகுதியில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து, 1 ¼ சவரன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது.

சென்னை, இராயப்பேட்டை பெண்கள் தங்கும் விடுதில் தங்கி, எத்திராஜ் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய்சகிரா பேகம், பெ/வ-31, க/பெ.சாய்வன் சராபாஷா என்பவர் நேற்று மாலை சுமார் 04.30 மணியளவில் வேலை முடித்து விட்டு மேற்படி இராயப்பேட்டை பெண்கள் விடுதிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லிப்ட் வேண்டுமா என்று கேட்டதின் பேரில் மேற்படி நபருடன் இரு சக்கர வாகனத்தில் மன்றோசிலை, மிலிட்டரி கேண்டீன் அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்படி நபர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாய்சகிரா பேகமை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 ¼ சவரன் தங்கச்சங்கிலி மற்றும்1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சாய்சகிரா பேகம், D-1 திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

D-1 திருவல்லிகேணி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரை மிரட்டி, தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்ற பிரகாஷ், வ/31, த/பெ.சுப்பிரமணியன், கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 1 ¼ சவரன் தங்கச்சங்கிலி, 1 செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 இரு சக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பிரகாஷ் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »