திருப்பரங்குன்றம் கீழக்குயில்குடியில் எம்.பி மாணிக்கம் தாகூர் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார்…

மதுரை – திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கீழக்குயில்குடி ஊராட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு- தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். சமணர் மலை அடிவாரத்திலுள்ள கருப்புகோவிலில் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மரக்கன்றுகளை நட்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார்,பிரேமராஜன், திருப்பரங்குன்றம் சேர்மன் வேட்டையன், துணை சேர்மன் இந்திரா ஜெயகுமார், மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உடன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன், பொறுப்பாளர் பழனிக்குமார், வட்டார தலைவர் காசிநாதன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »