திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தோப்பூரில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தோப்பூர் கிராமத்தில் முதலாவதாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் தோப்பூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். இம்மருத்துவ முகாமில் இரத்தம் சர்க்கரை சரி பார்த்தல், இசிஜி, இரத்த பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருந்துமாத்திரைகள் வழங்கபட்டது.

இதில்  வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார்,வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி, நிலையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சோபியா ராணி விஜயபாலன் மற்றும் தோப்பூர் ஊராட்சி மன்ற செயலர் மும்மூர்த்தி,துரைப்பாண்டி துரைபிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »