திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் மரம் நடுவிழா…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடுவிழா உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி BA தலைமையிலும்,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர். முனைவர். ச. விசாகன் முன்னிலையிலும் நடைபெற்றது. 
இவ்விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. விசாகன்,  ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் நகரத் தலைவர் ப.வெள்ளைச்சாமி திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி  மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தார்கள்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »