திண்டிவனம் அருகே கயிற்றில் தொங்கியபடி ஆண் பிணம்!கொலையா? தற்கொலையா? மயிலம் போலீசார் விசாரணை

திண்டிவனம் –

திண்டிவனம் அருகே மாடிப்படிக்கட்டில் கைப்பிடி சுவற்றில் கயிற்றில் தொங்கியபடி கிடந்த ஆண் பிரேதத்தை மயிலம் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், நாகலாபுரம் குளத்து தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மணி. இவர் கடந்த சில மாதங்களாக கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கூட்டேரிப்பட்டில் உள்ள பழைய அக்ரோ கட்டிடத்தின் மாடிப்படிக்கட்டு கைப்பிடி சுவற்றில் கயிற்றில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மணியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் இவரை கொலை செய்து கயிற்றில் கட்டி தொங்க விட்டனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »