திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் “டைமிங்” தகராறு நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பால் திடீர் பரபரப்பு

திண்டிவனம் – தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து இன்று மதியம் திண்டிவனம் மேம்பாலம் அருகே  மரக்காணம் சாலையில் வந்து நின்றது. பேருந்தில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்த நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி என்ற தனியார் பேருந்து நடத்துனர் மணிகண்டன் எங்களுக்குரிய நேரத்தில் ஏன் பேருந்தை இயக்குகிறீர்கள்? என அரசு பேருந்து நடத்துனர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி பின் கைகலப்பாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்களும் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு பணிமனை ஊழியர்கள் என கூட்டம் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் சமாதானம் செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து அரசு பேருந்து நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டைமிங் தகராறால் அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »