தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா…

மதுரை – தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக  கொரானா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு  தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி செயல் அலுவலர் சோனா பாய் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதை  தொடர்ந்து, கிடாரிபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதாமதிவாணன் தலைமையிலும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று  சமூக இடைவெளியை கடைப் பிடித்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இம்முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மருத்துவ பணியாளர்கள் வட்டார மருத்துவ வளர்ச்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மருத்துவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »