தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் கொரானா தடுப்பூசி திருவிழா

மதுரை – மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தொடர்ந்து நரசிங்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராக்காயி ஆனந்த் தலைமையிலும் திருவாதவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் துணைதலைவர் அசார் பானுசிக்கந்தர் ஆகியோர் தலைமையிலும், கிடாரிபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதாமதிவாணன் தலைமையிலும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இம்முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மருத்துவ பணியாளர்கள், வட்டார மருத்துவ வளர்ச்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மருத்துவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »