தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழா – அனைத்து கட்சி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை..

காஞ்சீபுரம் – தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளையொட்டி பெரிய காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி. பாலாஜி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, காஞ்சிபுரம் நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி கவிஞர் எஸ்.முருகவேள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இ.கண்ணபிரான், அதிமுக நிர்வாகியும், தொழிலதிபருமான கோல்ட் ரவி, பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.விஸ்வநாதன், யுவராஜ் என்கிற துரை, கே.வாசு, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திமுக:திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சீபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. ஜி.செல்வம், திமுக நிர்வாகிகள் சிபிஎம்அ.சேகரன், வக்கீல் துரைமுருகன், நெசவாளர் அணி நிர்வாகி தி.அன்பழகன்உள்பட பலர் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 
ஆர்.வி.ரஞ்சித்குமார்:முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ஆன்மீக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், முத்தியால்பேட்டையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்.பிறகு அவர் காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகே பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி, மாவட்ட திக செயலாளர் டி.ஏ.ஜி அசோகன், மற்றும் நிர்வாகிகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »